1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 27 மே 2019 (08:18 IST)

பிரதமர் மோடி இன்று வாரணாசி பயணம்

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக பெரும்பான்மையாக வெற்றி பெற்றது. பிரதமர்  நரேந்திர மோடி தேர்தலில் உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள வாரணாசியில் போட்டியிட்டு 4.80 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அமைச்சரவை கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்து முடித்த நரேந்திர மோடி இன்று தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க வாரணாசி செல்கிறார்.
வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் ஆலையம் சென்று வழிபட்ட பிறகு வாரணாசியில் உள்ள ஒவ்வொரு பகுதிக்கும் ஊர்வலமாக சென்று நன்றி தெரிவிக்கிறார். பின்னர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நன்றி தெரிவித்தல் கூட்டத்தில் உரையாற்றுகிறார். இதனால் வாரணாசி பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.