வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 17 ஜனவரி 2017 (16:10 IST)

மாணவிகள் ஆண் நண்பர்களுடன்தான் கல்லூரிக்கு வரவேண்டும்: கல்லூரி முதல்வர்

காதலர் தினத்தன்று கல்லூரி மாணவிகளுக்கு ஆண் நண்பர்களுடன் வர வேண்டும் என்று பெங்களூர் தனியார் கல்லூரி முதல்வர் அனுப்பிய கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


 

 
பெங்களூர் தனியார் கல்லூரி முதல்வர் வாட்ஸ் அப்பில் அனுப்பிய கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த கடிதத்தத்தில் அவரது கையெழுத்து தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்துயுள்ளது. அதில், 
 
பெண்களின் கவனத்திற்கு, பிப்ரவரி மாதம் 14-ந் தேதி (காதலர் தினத்தன்று )அனைத்து மாணவிகளுக்கும் கட்டாயமாக ஒரு ஆண் நண்பர் இருக்க வேண்டும்.
 
இது உங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும். ஆண் நண்பர்கள் இல்லாத மாணவிகள் அன்றைய தினம் கல்லூரி வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும், சமீபத்தில் ஆண் நண்பர்களுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் காட்ட வேண்டும்.
 
இவாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரனை நடத்தி வருகின்றனர்.