செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 23 டிசம்பர் 2017 (18:10 IST)

15 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம்; பாலியல் தொல்லை: சிக்கிய 53 வயது வழக்கறிஞர்!!

மும்பையில் 9 ஆம் வகுப்பு படித்து வந்த 15 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்து, மூன்று ஆண்டுகள் பாலியல் தொல்லை கொடுத்து வந்த வழக்கறிஞர் கைது செய்ப்பட்டுள்ளார்.
 
மும்பையை சேர்ந்த பெயர் வெளியிடப்படாத வழக்கறிஞர் கடந்த 2014 ஆம் ஆண்டு காலமாகினார். இவர்களுக்கு 15 வயதில் ஒரு பெண் குழைந்தை ஒன்று இருந்துள்ளது. இந்நிலையில் இவர் இரண்டாவது திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளார்.
 
அப்போது, அவரது மகள் வயதேயான் சிறுமியை கட்டாய திருமணம் செய்துள்ளார். அதோடு நிறுத்தாமல் அந்த சிறுமிக்கு மூன்று வருடம் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். தற்போது அந்த சிறுமி போலீஸில் புகார் அளித்த நிலையில் அந்த வழக்கறிஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
மேலும், கட்டாய திருமணத்திற்கு உறுதுணையாக இருந்த சிறுமியின் பாட்டி மற்றும் தாத்தாவை தேசி வருகின்றனர். அவர்களை கண்டிபிடிக்கும் பட்சத்தில் அவர்களுக்கும் சிறை தண்டணை விதிக்கப்படும் என தெரிகிறது.