வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 13 டிசம்பர் 2017 (11:14 IST)

கல்வி அதிகாரியை செருப்பால் அடித்த ஆசிரியை

ஆந்திர மாநிலத்தில் பாலியல் தொல்லை கொடுத்த அதிகாரியை, ஆசிரியை செருப்பால் அடித்துள்ளார். இந்த சம்பவம் சக ஆசிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் மார்க்காபுரத்தில் ராம்தாஸ் நாயக் என்பவர் கல்வி அதிகாரியாக பணியாற்றி வருகிறார். ராம்தாஸ் நாயக், பள்ளி ஆசிரியை ஒருவருக்கு சில நாட்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். ஆசிரியை பல முறை கண்டித்த போதும் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
 
சம்பவத்தன்று தனது அறையில் அமர்ந்திருந்த ஆசிரியையிடம், ராம்தாஸ் தனது வழக்கமான வேலையை காட்டியுளார். இதனால் கடுங்கோபமடைந்த ஆசிரியை தனது காலணியை எடுத்து ராம்தாஸை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த சக ஆசிரியர்கள், ஆசிரியையை சமாதனப்படுத்தினர். இதுகுறித்து ஆசிரியை, மாவட்ட கல்வி அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார்.
 
நாட்டில் தினந்தோறும் பல்வேறு பாலியல் வன்முறைகள் நடைபெற்று வருகிறது. இதுபோல் செய்யும் காம மிருகங்களுக்கு அவ்வப்போது  கடுந்தண்டணை வழங்கினால் தான் பாலியல் கொடுமைகள் நடைபெறாமல் இருக்கும்.