1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (07:23 IST)

பெட்ரோல் விலை உயர்வு: மாட்டுவண்டியில் சட்டமன்றம் வந்த எம்.எல்.ஏக்கள்

பெட்ரோல் விலை உயர்வு: மாட்டுவண்டியில் சட்டமன்றம் வந்த எம்.எல்.ஏக்கள்
பெட்ரோல் டீசல் விலையை கண்டித்து கர்நாடக சட்டசபைக்கு அம்மாநில எம்எல்ஏக்கள் மாட்டு வண்டியில் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையையும் சமையல் கியாஸ் விலையையும் தொடர்ந்து உயர்த்தி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கர்நாடக மாநில எம்எல்ஏக்கள் நேற்றைய சட்டமன்ற கூட்டத் தொடருக்கு மாட்டு வண்டியில் வந்தனர் 
 
முதலில் இந்த மாட்டு வண்டியை சட்டமன்ற வளாகத்தில் அனுமதிக்க  மறுத்த போலீசார்கள் பின்னர் எம்எல்ஏக்களின் வாக்குவாதத்தை அடுத்து அனுமதித்தனர். இதனையடுத்து சட்டமன்ற வளாகத்திற்குள் இந்த மாட்டு வண்டிகள் உள்ளே சென்றன என்பது குறிப்பிடத்தக்கது
 
மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சித்தராமையா உள்ளிட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நேற்று கர்நாடக சட்டசபையில் மாட்டு வண்டியில் வந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது