1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 30 ஜூலை 2021 (16:36 IST)

அதிகரிக்கும் கொரோனா; விமான போக்குவரத்து தடை மேலும் நீட்டிப்பு – மத்திய அரசு!

உலக நாடுகளில் கொரோனா பாதிப்புகள் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் சர்வதேச விமான சேவைக்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பரவல் உள்ள நிலையில் இந்தியாவில் சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை தொடர்ந்து வருகிறது. கடந்த மாதத்தில் மத்திய விமான போக்குவரத்து துறை விதித்த தடை நாளையுடன் முடிவுக்கு வருகிறது.

இந்நிலையில் மீண்டும் உலக நாடுகள் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் சர்வதேச விமான சேவைகளுக்கான தடையை ஆகஸ்டு 31 வரை நீட்டித்து விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.