1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 26 ஜூலை 2018 (12:05 IST)

விமான கழிவறையில் குழந்தையை போட்டு சென்ற 19 வயது விளையாட்டு வீராங்கனை

டெல்லிக்கு வந்த ஏர்-ஆசியா விமானத்தில் 19 வயது விளையாட்டு வீராங்கனை பெற்ற குழந்தையை கழிவறையில் வீசிய சென்ற சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.
மணிப்பூர் மாநிலம் இம்பாலில் இருந்து டெல்லிக்கு ஏர்-ஆசியா விமானம் வந்தது. அந்த விமானம் தரையிறங்கும் நேரத்தில், விமான ஊழியர்கள் கழிவறையில்  சோதனை செய்தனர். அப்போது அங்கு பிறந்து சில மணி நேரமான குழந்தை ஒன்று கிடந்தது தெரிய வந்தது. மேலும் அங்கு வளர்ச்சி முழுமை அடையாத  நிலையில் சிசு ஒன்று இறந்து கிடந்தது.
 
இதையடுத்து விமான நிலைய அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பெண் பயணிகள் விமானத்துக்குள்ளே  வைக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது விமானத்தில் பயணம் செய்த 19 வயது பெண் விளையாட்டு வீராங்கனை, தான் சிசுவை பெற்றெடுத்து  கழிவறையில் வீசியதாக கூறினார். இதையடுத்து அவரை மருத்துவ பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
 
இதுகுறித்து விமான நிலைய போலீஸ் அதிகாரி கூறுகையில், தீவிர விசாரணைக்கு பின் 19 வயது விளையாட்டு வீராங்கனை விமான கழிவறையில் குழந்தை  பெற்று சிசுவை வீசியது வெளிசத்துக்கு வந்துள்ளது. இது தொடர்பாக இன்னும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
 
ஏர் ஆசியா விமான நிர்வாகம் தரப்பில், ‘விமான கழிவறையில் சிசு வீசப்பட்டது தொடர்பாக விசாரித்து வருகிறோம். இதனால் ஏற்பட்ட இடையூறுகளுக்கு  பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.