வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 8 ஆகஸ்ட் 2017 (18:24 IST)

கருகலைப்பு செய்துக்கொண்ட 19 வயது மாணவி மரணம்

ஹைதராபாத்தில் கருகலைப்பு செய்துக்கொண்ட 19 வயது என்ஜினியரிங் மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
ஹைதராபாத்தில் என்ஜினியரிங் மாணவி ஒருவர் கருகலைப்பு செய்ய மருத்துவமனைக்கு தனது ஆண் நண்பருடன் சென்றுள்ளார். 5 மாதம் கர்ப்பிணியாக இருந்த அவருக்கு மருத்துவமனையில் கருகலைப்பு செய்யப்பட்டுள்ளது. கருகலைப்பு செய்யப்பட்ட உடனே அவரது உடல்நிலை மிகவும் மோசமாகி உள்ளது. 
 
இந்நிலையில் அவர் வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஆனால் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் உள்ளனர். கருகலைப்பு செய்த மருத்துவர்கள் மற்றும் மாணவியுடன் மருத்துவமனைக்கு சென்ற அவரது நண்பர் ஆகியோரிடம் விசாரணை நடைப்பெற்று வருகிறது.
 
மேலும் மருத்துவர்களின் அலட்சியம் காரணமாகவே என் மகள் உயிரிழ்ந்துவிட்டார் என மாணவியின் தந்தை புகார் அளித்துள்ளார்.