1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 24 ஏப்ரல் 2018 (12:33 IST)

ஏடிஎம் இயந்திரத்தில் நூதனமாக திருடிய அரசு மருத்துவர் கைது!

புதுச்சேரியில் நூதன முறையில் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து திருடிய அரசு மருத்துவமனை மருத்துவர் விவேக் கைது செய்யப்பட்டுள்ளார்.

 
கடந்த சில மாதங்களாக புதுச்சேரியில் உள்ள ஏடிஎம்களில் பணம் எடுக்காமலே வாடிக்கையாளர்களின் பணம் திருட்டு போய் உள்ளது. ஸ்மிக்கர் கருவி மூலம் பணம் திருடப்பட்டு வந்துள்ளது. காவல்துறையினர் முதலில் இதை அறியாமல் திருடர்களை பிடிக்க சிரமப்பட்டு வந்துள்ளனர். 
 
பின்னர் ஏடிஎம் மையத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவு மூலம் சந்தேகத்தின் பெயரில் நான்கு நபர்களுக்கு குறி வைத்தனர். அதில் அரசு மருத்துவமனை மருத்துவர் விவேக் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
 
காவல்துறையினர் தற்போது கைது செய்யப்பட்ட விவேக்கிடம் இருந்து ரூ.4 லட்சம் கைப்பற்றியுள்ளனர். மேலும் இந்த திருட்டில் தொடர்புடைய சிலரை தேடி வருகின்றனர்.