வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 23 மே 2018 (13:42 IST)

வரும் வாரம் பெட்ரோல் டீசல் விலை குறையும்...

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர, பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. இதனால், பெட்ரோல் ஜிஎஸ்டிக்குள் கொண்டுவரப்பட வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளது. 
 
மத்திய அரசு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.19.48-ம், ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.15.33-ம் உற்பத்தி வரியாக விதிக்கிறது. மாநிலத்துக்கு மாநிலம் பெட்ரோல், டீசல் விலை மாறுபடுவது மாநில அரசுகள் விதிக்கிற உள்ளூர் வரியால்தான்.
 
எனவே, பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் என்ன செய்யப்போகின்றன என்ற கேள்வியை பொதுமக்கள் எழுப்புகின்றனர். இந்நிலையில், மத்திய அரசு மூத்த அதிகாரி ஒருவர் இது குறித்து பேசியுள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது, பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவது அரசுக்கு நெருக்கடியான சூழல் ஆகும். உற்பத்தி வரி குறைப்புக்கான சாத்தியக்கூறுகளை நான் மறுப்பதற்கு இல்லை. இருந்தபோதும் அதை மட்டுமே சார்ந்து இருக்க முடியாது. 
 
உற்பத்தி வரியை குறைத்தால் நிதி பாதிப்புகள் ஏற்படும். பெட்ரோல், டீசல் சில்லரை விலையில் 20 முதல் 35 சதவீதம் மத்திய, மாநில அரசுகளின் வரியாக உள்ளது. பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதற்கு இந்த வாரம் சில நடவடிக்கைகள் எடுக்கப்படலாம். இ ந்த நடவடிக்கைகள் பல அளித்தால், வரும் வாரம் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இருக்கும் என தெரிவித்துள்ளார்.