வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 5 ஜூலை 2018 (20:31 IST)

ப்ளே ஸ்கூலில் 2 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை

சமீபத்தில் இங்கிலாந்து தொண்டு நிறுவனம் ஒன்று நடத்திய சர்வேயில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடு இந்தியா என தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதனை அரசு மறுத்தது. 
 
இவ்வாறு இருக்கையில் கொல்கத்தாவில் ப்ளே ஸ்சூலில் 2 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தாவில் இயங்கி வரும் ப்ளே ஸ்கூல் ஒன்றில் 2 வயது சிறுவனை அவரது பெற்றோர் சேர்த்துள்ளனர். 
 
கடந்த 27 ஆம் தேதி பள்ளிக்கு சென்று வந்த சிறுவனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிறுவனுக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
இதனையடுத்து பெர்ரோர் இதுகுறித்து குறிப்பிட்ட பள்ளி நிர்வாகத்திடம் கேட்ட போது பள்ளி நிர்வாகம் இதனை மறுத்துள்ளது. மேலும், சிசிடிவி கேமராக்களில் 26 ஆம் தேதியில் இருந்து எந்த ஒரு காட்சியும் பதிவாகவில்லை என நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஆனால், சிறுவனின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில், போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.