1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
  4. Kollywood gossips

என்னது.... அதை மட்டும் கட்டி குளிக்கணுமா?

Gossips
குழந்தைகளைகூட குளிக்க வைக்கலாம். சினிமாவில் நடிகைகளை குளிக்க வைக்க இயக்குனர்கள் படும் சிரமம் இருக்கிறதே. நீச்சல் குளத்தில் குளிக்கச் சொன்னால் சேலை கட்டிக் கொண்டு வந்து நிற்பார்கள். 
 
வன்மமாக படம் எடுத்திருக்கும் இயக்குனர் நாஞ்சில் நாட்டுக்காரர் போலிருக்கிறது. படம் முழுக்க நாஞ்சில் நாட்டில் எடுக்கப்பட்டிருக்கிறது. அங்குள்ள பெண்கள் குளங்களிலும், ஆறுகளிலும் லுங்கி அல்லது பாவாடையை மார்புக்கு மேல் தூக்கிக்கட்டி குளிப்பார்கள். இயக்குனர் படத்தின் நாயகியான தண்ணீர் பறவை நடிகையிடம் பாவாடை தந்து குளிக்கச் சொல்லியிருக்கிறார். 
 
என்னது... பாவாடை மட்டும் கட்டி குளிக்கணுமா... நோ என்று நடிகை வீறிட்டிருக்கிறார். பிறகு அரைமணிநேரம் நாஞ்சில் நாட்டு வழக்கத்தை எடுத்துச் சொல்லி தண்ணீர் பறவையை குளிக்க தயார்படுத்தியுள்ளார். 
 
படத்தில் இந்த பாவாடை குளியல் சில நிமிடங்கள் இடம்பெறுகிறது.
About Writer
Mahalakshmi