1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By sivalingam
Last Modified: புதன், 30 ஆகஸ்ட் 2017 (23:23 IST)

அரசனை நம்பி புருசனை கைவிட்ட கீர்த்தி சுரேஷ்?

ரஜினிமுருகன், ரெமோ ஆகிய இரண்டு ஹிட் படங்களின் நாயகி என்பதால் கீர்த்திசுரேஷ் மீது சிவகார்த்திகேயனுக்கு ஒரு தனி பாசம் இருந்தது. இந்த நிலையில் அவ்வப்போது கீர்த்திசுரேஷை தனது படங்களில் நடிக்க வைக்க எண்ணி இருந்தாராம் சிவகார்த்திகேயன்



 
 
ஆனால் கீர்த்திசுரேஷூக்கு சமீபத்தில் ஒரு தெலுங்கு பட வாய்ப்பு கிடைக்க அங்கு சென்றால் ஹிட் நாயகி ஆகிவிடலாம் என்ற நினைப்பில் சென்றார். இந்த கேப்பில் சிவகார்த்திகேயனுடன் டச் விட்டு போனது குறித்தும் அவர் கவலைப்படவில்லை
 
இந்த நிலையில் கீர்த்திசுரேஷ் நடித்த தெலுங்கு படம் பிளாப் ஆகிவிட நொந்து நூலாகி போன கீர்த்திசுரேஷ் மீண்டும் சிவகார்த்திகேயன் கதவை தட்ட ஆரம்பித்துவிட்டாராம். ஆனால் சிவகார்த்திகேயன் கண்டுகொள்ளவே இல்லை என்று கூறுகிறது சினிமா வட்டாரங்கள். அரசனை நம்பி புருசனை விட்ட கதையாக தெலுங்கு பக்கம் சென்று தமிழ் மார்க்கெட்டையும் இழந்தார் கீர்த்தி. அவருக்கு இப்போதைக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை 'தானா சேர்ந்த கூட்டம்' மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.