1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: வியாழன், 16 மார்ச் 2023 (19:25 IST)

கடன் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரும் கடுகு பரிகாரம்..!

கடுகு பரிகாரம் செய்தால் கடன் பிரச்சனை முடிவுக்கு வந்துவிடும் என ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர். 
 
ஒரு கைப்பிடி அளவு வெண்கடுகை எடுத்து உங்களுடைய தலையை மூன்று முறை சுற்றி கிழக்கு பார்த்து ஈஈஈண்  நான்கு மூலைகளிலும் கொஞ்சம் கொஞ்சமாக கடுகை போட்டு விட வேண்டும். 
 
அதன் பிறகு மறுநாள் காலை எழுந்தவுடன் அந்த வெண்கடுகை எல்லாம் அள்ளி ஒரு பேப்பரில் வைத்து ஒரு அகல் விளக்கில் கொட்டி அதில் கற்பூரம் வைத்து நெருப்பு மூட்டி விட வேண்டும் 
 
நெருப்பில் இந்த வெண்கடுகுகள் படபடவென எரிந்தவுடன் உங்கள் கடன் பிரச்சனையும் ஒரு முடிவுக்கு வந்துவிடும் என்று ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர். கடன் பிரச்சனை உள்ளவர்கள் இந்த பரிகாரத்தை செய்து பார்க்கலாம் என ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran