1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 12 மார்ச் 2018 (16:32 IST)

இலவச சிம், 60% சலுகை: பிஎஸ்என்எல் LOOT LO ஆஃபர்!

பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் ஜியோ, ஏர்டெல், வோடாபோன் அகிய தனியார் நெட்வொர்க் நிறுவனங்களுடன் போட்டி போட்டு சலுகைகளை வழங்கி வருகிறது. 
 
ஏர்டெல், ஐடியா, வோடாபோனை விட 50% கூடுதல் டேட்டாவை வழங்கும் நோக்கத்தில் ரூ.399 திட்டத்தை அறிமுகம் செய்தது. இது 2018 மார்ச் 1 முதல் அமலுக்கு வந்தது. தற்போது தனது வாடிக்கையாளர்களுக்கு பழைய சேவையை புதுப்பித்து வழங்குகிறது. 
 
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் லூட் லோ ஆபர் என்று அழைக்கப்படும் இந்த திட்டத்தில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் திட்டங்கள் மீது ஒரு நம்பமுடியாத 60% சலுகையை வழங்குகிறது.
 
இது குறித்து வெளியான செய்திகள் பின்வருமாறு, லூட் லோ சேவை மார்ச் 6 ஆம் தேதி துவங்கி மார்ச் 31 வரை கிடைக்கும். உதாரணத்திற்கு ரூ.1525 மீதான 12 மாத கால அட்வான்ஸ் ரெண்டல் பெற ஒரு வாடிக்கையாளர் விரும்பினால் 60% தள்ளுபடி கிடைக்கும். 
 
இதனையே ஆறு மாதங்களுக்கு பெற விரும்பினால் 45% தள்ளுபடியும் மற்றும் மூன்று மாதங்களுக்கு தேவையெனில் 30% தள்ளுபடியும் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த திட்டம் பிஎஸ்என்எல் போஸ்ட்பெயிட் திட்டங்களில் கிடைக்கும்.