வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. வேலை வழிகாட்டி
  3. க‌ல்‌வி
Written By
Last Modified: சனி, 24 நவம்பர் 2018 (21:26 IST)

புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கல்வி கட்டணம் கிடையாது : பாரிவேந்தர்

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் படிக்கின்ற புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கல்வி கட்டணம் கிடையாது என பாரிவேந்தர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் கஜா புயலால்  இதுவரை 12 மாவட்டங்கள் முற்றிலும் பாதிக்கப்படுள்ளன. அதிலுள்ள மக்கள் அனைவரும் வாழ்வாதாரத்தை தொலைத்து விட்டு பரிதாபமாக உள்ளனர்.

இந்நிலையில் பாரிவேந்தர் கூறியுள்ளதாவது:

எஸ்.ஆர்.எம். பல்கலைகழகத்தில் படிக்கின்ற புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 650 மாணவர்களுக்கு 4 ஆண்டு கல்விக்கட்டணம் ரூ.48கோடி முழுமையாக விலக்கு அளிக்கப்படும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.