செவ்வாய், 19 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 6 மார்ச் 2018 (18:45 IST)

முத்தரப்பு முதல் டி20 போட்டி: இந்திய அணி பேட்டிங்

இந்தியா- இலங்கை இடையேயான முதல் டி20 போட்டியில் இலங்கை அணி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.
 
இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய 3 அணிகள் பங்ககேற்கும் முத்தரப்பு டி20 போட்டி இலங்கையில் நடைப்பெறுகிறது.
 
இன்று இந்தியா- இலங்கை இடையேயான முதல் டி20 போட்டி தொடங்கியது. இதில், டாஸ் வென்று இலங்கை அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி இந்திய அணி வீரர்கள் பேட்டிங் செய்ய களமிறங்க உள்ளனர்.
 
இந்த டி20 தொடரில் இந்திய அணி வீரர்கள் கோலி, தோனி, பும்ரா, புவனேஷ்வர்குமார் உள்ளிட்டோருக்கு ஒய்வு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.