ஸ்மார்ட்போன் திரையை நொறுக்கிய மனைவி அடித்து கொலை
சீனாவில் மனைவி ஸ்மார்ட்போன் திரையை நொறுக்கியதால், ஆத்திரமடைந்த கணவன், மனைவியை அடித்துக் கொலை செய்தார்.
சீனாவில் கணவன் ஒரு நிலையான வேலைக்கு செல்லாமல், எப்போதும் வீட்டிலே இருந்து வந்துள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
கணவன் எப்போதும் ஸ்மார்ட்போனிலே நேரத்தை செலவிடுவதாக குற்றம் கூறியுள்ளார். அதோடு ஆத்திரமடைந்து செல்போனை தூக்கி வீசியுள்ளார். அதில் ஸ்மார்ட்போன் திரை நொறுங்கியது.
இதில் ஆத்திரமடைந்த கணவன் மனைவியை தடியால் அடித்து கொலை செய்தார். இதுகுறித்து காவல்துரையினர் வழக்கு பதிவு அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.