செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 10 நவம்பர் 2018 (13:03 IST)

இரண்டு கப்பல்கள் நேருக்குநேர் மோதி விபத்து !!!

நார்வே நாட்டைச் சேர்ந்த நேட்டோ போர்க் கப்பலில் அந்நாட்டுப் படையில் உள்ள 137 வீரர்களும் கடலில் நார்த் ஆப் பெர்கான் என்ற இடத்தில்  போர்  பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அவ்வழியே கச்சா எண்ணேய் ஏற்றிவந்த மற்றொரு பெரிய கப்பலானது நேட்டோ போர்க்கப்பலின் மீது மோதியதில் எண்ணெய்க் கப்பல் பெரும் விபத்துக்குள்ளானது.
 
இவ்விபத்தில் கப்பலில் பயிற்சி பெற்று வந்த வீரர்களுக்கும் மற்றும் எண்ணெய்க்கப்பலில் பயணித்த யாருக்கும் எந்தவித பாதிப்பும் நேரவில்லை என தெரிகிறது.
 
இவ்வளவு நவீன தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட காலத்திலும் முன்பு டைட்டானிக் காலத்தில் நிகழ்ந்த மாதிரி விபத்துகள் நேர்வது எப்போதுதான் தவிர்க்கப்படுமோ...?
 
மனித முயற்சியால் ஆகாத காரியம் ஒன்றுமில்லைதானே!