செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 31 மார்ச் 2015 (19:20 IST)

திருமணத்துக்கு முன்னர் உடலுறவு - கல்லால் அடித்து ஐ.எஸ்.ஐ.எஸ் கொலை

திருமணத்துக்கு முன்னர் உடலுறவில் ஈடுபட்டதாகக் கூறப்படும் காதலர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளால் கல்லால் அடித்து கொல்லப்பட்டுள்ளனர்.
 

 

ஈராக்கின் மௌசூல் நகரில் காதலர்கள் திருமணத்திற்கு உடலுறவில் ஈடுபட்டதிற்காக கல்லால் அடித்துக் கொள்ளப்பட்டுள்ளனர். கற்களால் தாக்கி கொல்லப்பட்ட ஆண் மற்றும் பெண் இருவரினதும் வயது 20-30 க்குள் இருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
 

 
பொதுமக்கள் திரண்டிருக்கும் ஒரு இடத்தில் காதலர்கள் அழைத்து வரப்பட்டனர். அவர்கள் இருவருக்கும் பொதுமக்கள் முன்பே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.


 

இது மற்றவர்களுக்கு ஒரு முன்னெச்சரிக்கையாக இதை குறிப்பிட்டுள்ளனர். இச்சம்பவத்தின் படங்களும் இணையத்தில் வெளியாகியுள்ளது.