1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By Ravivarma
Last Modified: வெள்ளி, 9 மே 2014 (16:07 IST)

ச‌சிகுமா‌ரி‌ன் நாதஸ்வர ஓசையிலே..

நடிகரும், இயக்குனருமான சசிகுமார் அலுவலகம் பக்கம் போனால், அடிக்கடி நாதஸ்வர இசையை கேட்கலாம். சசிகுமார்தான் வாசித்துப் பழகிக் கொண்டிருக்கிறார். 
தான் அடுத்து நடிக்கப் போகும் படம் தாரை தப்பட்டை இதில் நாதஸ்வர கலைஞராக சசிகுமார் நடிக்கிறார். அதற்காக சொந்தமாக நாதஸ்வரம் ஒன்றை வாங்கி வந்து, தினம் கிடைக்கிற நேரத்தில் ஒரு மணி நேரம் ஊதிப் பழகிக் கொண்டிருக்கிறார். 
 
அத்தோடு, சிவாஜி நடித்த தில்லானா மோகனாம்பாள் படத்தையும் அடிக்கடி போட்டுப் பார்த்து, சிவாஜி ஊதும்போது ஏற்படும் முக பாவங்களையும் பயின்று வருகிறார். 
 
இதில் கரகாட்டம் ஆடும் பெண்ணாக நடிக்கும் வரலட்சுமியும், கரகாட்டத்தை முழுமையாக கற்று வருகிறார். இந்தப் படத்தை சசிகுமார் மிகவும் நம்புவதால் இது போன்ற சிரமம் பாராமல் பயிற்சிகளை மேற்கொண்டு நடித்து வருகிறார்.