1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 19 அக்டோபர் 2024 (09:47 IST)

படப்பிடிப்புத் தளத்திலேயே என் உயிர் போகவேண்டும்… ஷாருக் கானின் ஆசை!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானுக்கு கடந்த சில ஆண்டுகள் மோசமான ஆண்டாக அமைந்தன. அவர் நடித்த எல்லா படங்களும் ப்ளாப் ஆகின. இதையடுத்து ஒரு நீண்ட பிரேக் எடுத்துக்கொண்டு இப்போது அவர் இப்போது மீண்டும் ஹிட் பாதைக்கு திரும்பியுள்ளார்.

இதையடுத்து 2023 ஆம் ஆண்டில் அவர் நடிப்பில் ரிலீஸ் ஆன பதான் மற்றும் ஜவான் ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஹிட்டடித்து 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனைப் படைத்தன. இந்நிலையில் அவர் நடிப்பில் ராஜ்குமார் ஹிரானி இயக்கிய டன்கி திரைப்படமும் வெளியாகி 500 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்தது.

ஹாட்ரிக் கொடுத்த ஷாருக் கான் இன்னும் தன்னுடைய அடுத்த படத்தை அறிவிக்கவில்லை. அதனால் 2024 ஆம் ஆண்டு அவரின் எந்த படமும் ரிலீஸாகவில்லை. இந்நிலையில் சுவிட்சர்லாந்தின் லோகார்னோ திரைப்பட விருது விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. அதைப் பெற்றுக்கொண்டு பேசிய ஷாருக் கான் “சாகும் வரை நான் நடிக்க ஆசைப்படுகிறேன். படப்பிடிப்புத் தளத்தில் நடிக்கும்போதே என் உயிர் போகவேண்டும். ஆக்‌ஷன் சொல்லும் போது நான் நடிக்க வேண்டும்.  கட் சொல்லும்போது எழுந்திருக்கக் கூடாது” எனக் கூறியுள்ளார்.