வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 26 ஜனவரி 2021 (15:55 IST)

கர்ணன் அனைத்தும் கொடுப்பான்…படம் பார்த்து மிரண்ட சந்தோஷ் நாராயணன் டிவீட்!

தனுஷ் மற்றும் பலர் நடித்துள்ள கர்ணன் படத்தினைப் பார்த்து மிரண்டு போயுள்ளதாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார்.

தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாக்கிய கர்ணன் திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த படத்தின் காட்சிகள் லாக்டவுனால் பாதிக்கப்பட்டதால் தளர்வுகளுக்குப் பின்னர் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி நடத்தப்பட்டது. இப்போது படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் படத்தைப் பார்த்துள்ள இசையமைப்பாளர் அதுபற்றி டிவீட் செய்துள்ளார்.

அதில் ‘கர்ணன் படத்தை பார்த்து மிரண்டு போனேன். தனுஷ், மாரி செல்வராஜ், கலைப்புலி தாணு மற்றும் படக்குழுவினரைப் பார்த்து பெருமைப் படுகிறேன். கர்ணன் – அனைத்தும் கொடுப்பான்’ எனக் கூறியுள்ளார்.