1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: செவ்வாய், 25 நவம்பர் 2014 (09:20 IST)

காதலரை கைப்பிடித்தாலும் சினிமாவை கைவிடமாட்டேன் - பத்மப்ரியாவின் பெரிய மனசு

சினிமாவில் பெரிதாக வாய்ப்பு இல்லாத நிலையில் தனது காதலர் ஜாஸ்மினை மும்பையில் திருமணம் செய்து கொண்டார் நடிகை பத்மப்ரியா. திரையுலகினர் யாருக்கும் அழைப்பில்லை. பத்மப்ரியாவை பத்து என்று உரிமையாக அழைக்கும் சேரனுக்கும் நோ என்ட்ரி.
சரிதான்... கணவருடன் அமெரிக்காவில் செட்டிலாகப் போகிறார். இனி சினிமாவில் நடிக்கப் போவதில்லை, எதற்கு சினிமாக்காரர்களை அழைக்க வேண்டும் என நினைத்திருப்பார் என எண்ணிக் கொண்டிருக்க, தனது கலைத்தாகம் அவ்வளவு எளிதில் அடங்கக் கூடியதில்லை என அறிவித்துள்ளார் பத்மப்ரியா.
 
அதாவது, அமெரிக்காவில் சில மாதங்கள் கணவருடன் இருந்துவிட்டு மீண்டும் சினிமாவில் நடிக்கப் போகிறாராம். திருமணத்துக்குப் பிறகும் நடிப்பை தொடர்வது என்பது திருமணத்துக்கு முன்பே கணவருடன் போட்டுக் கொண்ட ஒப்பந்தமாம். எந்த காரணம் கொண்டும் நடிப்பை மட்டும் விட மாட்டேன், அது என் சுவாசம் மாதிரி என்று கூறியுள்ளார் பத்மப்ரியா.
 
திருமணம் ஆச்சில்ல... இனி மம்முட்டி, மோகன்லாலுக்கு நீங்கதான் ஹீரோயின்.