செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: திங்கள், 24 ஜூலை 2017 (22:59 IST)

சேப்பாக்கம் மைதானத்தில் திரண்ட ஓவியா புரட்சி படை: பெரும் பரபரப்பு

களவாணி' படத்தில் நடிக்க வந்த ஓவியா, அதன் பின்னர் சுமார் பத்து படங்களுக்கும் மேல் நடித்துவிட்டார். ஆனால் அவரை ஒரு பெரிய ஹீரோயினியாக கண்டுகொள்ளாத ரசிகர்கள், பிக்பாஸ் வீட்டில் இருந்த இரண்டே வாரத்தில் அவரை தங்கள் கனவு நாயகியாக ஏற்று கொண்டனர்.



 
 
பிக்பாஸ் நிகழ்ச்சியை தினமும் நான்கு கோடி பேர் பார்ப்பதாக கூறப்படும் நிலையில் கிட்டத்தட்ட அனைவரதும் மனதிலும் அந்த புன்சிரிப்பான உள்ளம் அஸ்திவாரம் போட்டு தங்கிவிட்டது.
 
இந்த நிலையில் இன்று சேப்பாக்கம் மற்றும் திருவள்ளூர் அணிகளுக்கு இடையே டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டி நடைபெறும்போது பார்வையாளர்களில் ஒருசிலர் ஓவியா ஆர்மி என்ற பதாகைகளுடன் இருந்ததை பார்க்க முடிந்தது. ஒவ்வொரு ரன்னும் அடிக்கும்போது, விக்கெட் விழுந்தபோதும் ஓவியா ஆர்மி எழுந்து நின்று கரகோஷம் போட்டதை மைதானமே ஆச்சரியமே பார்த்தது.
 
கிரிக்கெட் விளையாடுபவர்களை பார்த்ததைவிட ஓவியா ஆர்மி படையினர்களை பார்த்து கொண்டே இருந்தவர்கள் தான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.