1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 19 அக்டோபர் 2024 (09:53 IST)

நான் உங்களோட ரசிகன்… சாய்பல்லவியை நெகிழ வைத்த மணிரத்னம்!

நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமடைந்த சாய் பல்லவி, 2015 ஆம் ஆண்டு வெளியான பிரேமம் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அந்த படத்தின் வெற்றி அவரை தென்னிந்திய சினிமா முழுவதும் பிரபலமானார். அதையடுத்து தமிழில் தியா, என் ஜி கே, கார்கி மற்றும் மாரி 2 உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தார். 

முன்னணி நடிகையாக இருந்தாலும் அவர் நல்ல கதாபாத்திரங்கள் உள்ள படங்களில் மட்டுமே நடித்தார். தற்போது சிவகார்த்தியனோடு ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் ‘அமரன்’ படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் நேற்று நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் மணிரத்னம் கலந்துகொண்டார். சாய்பல்லவி பற்றி பேசும்போது “நான் சாய்பல்லவியின் தீவிர ரசிகன். அவரோடு விரைவில் இணைந்து பணியாற்ற ஆசையாக உள்ளேன்” எனக் கூறியுள்ளார்.