1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Modified: செவ்வாய், 9 ஆகஸ்ட் 2016 (13:53 IST)

ஆன்லைன் வர்த்தகம் செய்வதாக பெண்களை காதலித்து ஏமாற்றிய இளைஞர்

மதுரை அருகே ஆன்லைன் வர்த்தகம் செய்வதாக கூறி ஏராளமான பெண்களை காதலித்து ஏமாற்றி பல லட்சம் மோசடி செய்த இளைஞரை காவல் துறையினர் வலை விரித்து தேடி வருகின்றனர்.


 

 
மதுரை மாவட்டம் சேடப்பட்டியை சேர்ந்த இலம்பெண் லதா என்பவர் காவல் துறையினரிடம் இளைஞர் ஒருவர் ஏமாற்றி விட்டதாக புகார் அளித்தார்.
 
ஆன்லைனில் விலை உயர்ந்த பொருட்களை குறைவான விலையில் வாங்கி விற்பனை செய்யலாம். அதன்மூலம் அதிக லாபம் ஈட்டலாம் என்று ஆசைக்காட்டி அந்த பொண்ணிடம் பல லட்சம் ரூபாய் ஏமாற்றியுள்ளார்.
 
இதுகுறித்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஆன்லைன் வர்த்தகம் செய்வதாக கூறி ஏராளமான பெண்களை ஏமாற்றி பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததோடு, பல பெண்களை காதலித்தும் ஏமாற்றியுள்ளதாக தகவல் கிடைத்தது.
 
இதையடுத்து காவல் துறையினர் தனிப்படை அமைத்து அந்த இளைஞரை தேடி வருகின்றனர்.