ஞாயிறு, 6 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 8 மார்ச் 2022 (09:28 IST)

மார்ச் 10 முதல் முன்பதிவில்லா ரயில் பெட்டிகள்: ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!

மார்ச் 10ஆம் தேதி முதல் முன்பதிவில்லா ரெயில் பெட்டிகள் இணைக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக முன்பதிவில்லா ரெயில் பெட்டிகள் இணைக்கப்படவில்லை 
 
தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக முன்பதிவில்லாத ரயில் பெட்டிகள் இணைக்க படாமல் இருந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து விட்டதால் மீண்டும் முன்பதிவில்லா ரெயில் பெட்டிகளை இணைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது
 
தென் இந்தியாவில் ஓடும் 192 எக்ஸ்பிரஸ் ரயில்களில் முதல் கட்டமாக முன்பதிவில்லா ரெயில் பெட்டிகள் இணைக்கப்படும் என தென்னிந்திய ரயில்வே நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார். இதனால் முன்பதிவில்லாத ரயில் பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்