செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 22 ஜனவரி 2021 (12:46 IST)

எந்த பாடம் நடத்துறது.. எதை விடுறது?? – அறிவிப்பு இல்லாததால் குழப்பத்தில் ஆசிரியர்கள்!

கொரோனா காரணமாக பள்ளிகள் செயல்படாத நிலையில் பாடங்கள் குறைக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்த நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கிடைக்காததால் ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

கொரோனா காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதலாக பள்ளிகள் செயல்படாமல் இருந்து வந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னதாக பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மாணவர்களின் பாடச்சுமையை குறைக்கும் பொருட்டு 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பாடங்கள் குறைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது.

ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ சுற்றறிக்கை பள்ளிகளுக்கு கிடைக்க வில்லை என கூறப்படுகிறது. வாட்ஸப் மூலமாக வந்த அறிவிப்பின் அடிப்படையில் மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடங்கள் குறித்து ஆசிரியர்கள் விளக்கமளித்து வருவதாகவும், அதிலும் பாடநூலின் சில பக்கங்களை நீக்க தகவல் உள்ளதாகவும், குறிப்பிட்ட பாடம் என்பது பற்றி இல்லாததாலும் ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த முறையான சுற்றறிக்கையை பள்ளிக்கல்வி துறை வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கல் வெளியாகியுள்ளது.