1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 27 ஜனவரி 2017 (11:03 IST)

சசிகலா இதை செய்திருக்கக் கூடாது - எதை சொல்கிறார் பாக்யராஜ்?

ஜெ.வின் மரணத்தில் உள்ள மர்மம் பற்றியும், சசிகலா பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டது பற்றியும் முதல் முறையாக  நடிகரும், இயக்குனருமான பாக்யராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
இதுபற்றி ஒரு பிரபல வார இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் “ ஜெ.மருத்துவமனையில் இருந்த போது அவரை சந்திக்க மருத்துவமனை சென்றேன். ஆனால் முடியவில்லை. அவர் இறந்த போது, யார் முக்கியமானவர்கள் என்பதைக் காட்ட வேண்டும் என்றுதான் எல்லோரும் இருந்தார்களே தவிர, உண்மையான உணர்ச்சியோடு யாரும் அங்கே நிற்கவில்லை.
 
போட்டியின்றி சசிகலாவி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்க வாய்ப்பு இருந்தும், அப்படி செய்யாமல் ஏன் நியமனம் செய்தார்கள் என்பது எனக்குப்புரியவில்லை.
 
ஜெ.விற்கு சிகிச்சை அளிக்கப்பட்ட ஒரு புகைப்படத்தையாவது வெளியிட்டிருக்கலாம். அதை செய்யாததால்தான் நீதிபதியே கேள்வி கேட்கும் நிலை ஏற்பட்டது. மக்களுக்கு எழுந்த சந்தேகங்களுக்கு சசிகாலா விளக்கம் அளித்திருக்க வேண்டும் ” என அவர் கூறியுள்ளார்.