செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : திங்கள், 20 ஜூன் 2016 (15:36 IST)

ரூ.54 லட்சம் கையாடல் செய்த பஞ்சாயத்து தலைவி கைது

ரூ.54 லட்சம் கையாடல் செய்த பஞ்சாயத்து தலைவி கைது

கடலூர் அருகே, ரூ.54 லட்சம் கையாடல் செய்த பஞ்சாயத்து தலைவியை போலீசார் கைது செய்தனர்.
 

 
கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அடுத்த நெல்லிக்கொல்லை ஊராட்சித் தலைவியாக இருப்பவர் ஆரோக்கியராணி. திமுகவைச் சேர்ந்தவர். இவரது கணவர் ஜெயராஜ். இந்த நிலையில், இவர்கள் ஊராட்சி நிதியில் ரூ.54 லட்சம் கையாடல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
 
இதனையடுத்து, புவனகிரி பிடிஓ தாராஸ்வரி தலைமையில் நடைபெற்ற விசாரணையில், பஞ்சாயத்து தலைவி ஆரோக்கியராணி, அவரது கணவர் ஜெயராஜ் ஆகியோர் ஊராட்சி நிதியில்ரூ. 54 லட்சம் கையாடல் செய்தது உறுதி செய்யப்பட்டது. இதனால், இவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.