திங்கள், 17 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 17 அக்டோபர் 2021 (11:59 IST)

கட்சிக்கு ஒரு உளவுப்படை வைக்க போகிறோம்! – ராமதாஸ் அதிரடி!

பாமக நிர்வாகிகளுடன் ஆன்லைன் மூலமாக பேசிய நிறுவனர் ராமதாஸ் கட்சிக்கு உளவுப்படை அமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுகவோடு கூட்டணி அமைத்திருந்த பாமக, தற்போது நடந்த 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டது. எனினும் பெருவாரியான ஆதரவு இல்லாமல் தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் இன்று கட்சி நிர்வாகிகளுடன் ஆன்லைன் மூலமாக பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ் “எனது 41 ஆண்டுகால உழைப்பு மரியாதை இல்லாமல் போய்விட்டது. இனி ஆதாயத்துக்கு யாரும் கட்சியில் இருக்க வேண்டாம். கட்சியை விட்டு தாவுவோர் இப்போதே சென்று விடுங்கள். கட்சிக்கு ஒரு உளவுப்படை அமைக்க போகிறோம்” என தெரிவித்துள்ளார்.