1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : ஞாயிறு, 20 செப்டம்பர் 2015 (22:44 IST)

மதிமுக புதிய மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்: வைகோ அறிவிப்பு

சேலம், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு புதிய மதிமுக மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்படுள்ளதாக மதிமுக பொதுச் செயாலளர் வைகோ அறிவித்துள்ளார்.


 

இது குறித்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:–
 
விழுப்புரம் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் நடராசன் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுகிறார். அவருக்கு பதிலாக, உளுந்தூர்பேட்டை ஜெய்சங்கர் நியமிக்கப்படுகிறார்.
 
காஞ்சிபுரம் மாவட்டத்தை, காஞ்சிபுரம் கிழக்கு மற்றும் காஞ்சிபுரம் மேற்கு என இரு மாவட்டமாக பிரிக்கப்பட்டு, காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளராக பார்த்திபனும், காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட கழக பொறுப்பாளராக ஜெகன்.தனசேகரனும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
 
சேலம் மாவட்டத்தை, சேலம் கிழக்கு மற்றும் சேலம் மேற்கு என இரு மாவட்டமாக பிரிக்கப்பட்டு, சேலம் கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளராக கோபால்ராஜ்-ம், சேலம் மேற்கு மாவட்ட கழக பொறுப்பாளராக மகேந்திரனும் நியமிக்கப்படுகிறார்கள்.
 
மதுரை புறநகர் மாவட்டத்தை, மதுரை புறநகர் வடக்கு மற்றும் மதுரை புறநகர் தெற்கு என இரு மாவட்டமாக பிரிக்கப்பட்டு, மதுரை புறநகர் வடக்கு மாவட்ட கழக பொறுப்பாளராக எம்.மார்நாடு, மதுரை புறநகர் தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளராக வழக்கறிஞர் எம்.ஆர்.கதிரேசன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுகின்றனர்.
 
மேலும், மதிமுக மகளிர் அணி செயலாளராக டாக்டர் ரொஹையா மாலிக்  நியமிக்கப்படுகிறார் என தெரிவித்துள்ளார். 

கடந்த சில தினங்களுக்கு முன்பு, மதிமுகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் பலர விலகியதை அடுத்து, அந்த பதவிகளுக்கு புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.