1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 6 ஜூன் 2018 (15:00 IST)

திடீரென இருண்ட வானம் - சென்னையின் பல இடங்களில் மழை

சென்னையில் பல இடங்களிலும் திடீரென மழை பெய்ய துவங்கியுள்ளது.

 
அக்னி வெயில் முடிந்து சில நாட்கள் ஆன நிலையிலும், தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாகவே வெயில் கொளுத்தி வந்தது. இதனால், இரவிவில் புழுக்கம் அதிகமாகவே இருந்தது.
 
இந்நிலையில், இன்று 2.30 மணியளவில் வானம் இருட்டத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து சென்னையின் தி.நகர், நுங்கம்பாக்கம், ஆவடி, அம்பத்தூர், கே.கே.நகர்,  மெரினா, அயனாவரம், அண்ணாசாலை, மாங்காடு உள்ளிட்ட பல பகுதிகளிலும் மழை பெய்யத் துவங்கியது. 
 
இது சென்னை வாசிகளுக்கு மிகவும்  மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.