தமிழக உளவுத்துறை புதிய ஐ.ஜியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமனம்
தமிழக உளவுத்துறை புதிய ஐ.ஜியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
\
தமிழக உளவுப் பிரிவு ஐ.ஜியாக பணியாற்றி வரும் கண்ணப்பன் ஜூலை 31ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். இந்த நிலையில், புதிய உளவுப் பிரிவு ஐ.ஜியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான ஆணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
மேற்கு மண்டல ஐ.ஜி. உள்பட பல்வேறு பணிகளில் சிறப்பாக பணியாற்றிய இவர், தமிழகத்தில் நேர்மையான அதிகாரிகள் லிஸ்ட்டில் முதன்மையாக இருப்பவர் ஆவார்.