''இலங்கைக்குக் கிடைத்த பன்னாட்டு ஆயுத உதவியால் விடுதலைப் புலிகளுக்குப் பின்னடைவும் தோல்வியும் ஏற்பட்டபோது உள்மனதில் மௌனமாக குதூகலித்தவர்தான் கருணாநிதி'' என்று ம.தி.மு.க பொதுச் செயலர் வைகோ கடுமையாக தாக்கியுள்ளார்.
"தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலை வகுப்புகளில் தமிழ் பாடத்தை தூய தமிழில் பிற மொழி கலப்பு இல்லாமல் எடுக்க வேண்டும்'' என்று பள்ளிக் கல்வித்துறை கேட்டுக் கொண்டுள்ளது.