சசிகலா புஷ்பா வாட்ஸ்அப்பில் கூறிய கருத்து!
பல பிரச்சனைகளில் சிக்கி உள்ளவர் மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா.
இவர் முதலமைச்சர் ஜெயலலிதாவை எதிர்த்துக்கொண்டதால், அதிமுக கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், இவர் ஊடகங்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் புகைப்படம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், சிங்கப்பூரின் பாராளுமன்றம் முன்பு அவர் நிற்கும் புகைப்படம் இருந்தது.
புகைப்படத்துடன், மேலும், செய்தி ஒன்றையும் அவர் வாட்ஸ்அப்பில் அனுப்பி இருந்தார். அதில் அவர் கூறியதாவது, ”சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதனின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற ஒரே தமிழ் எம்.பி. நான் தான்.” என்றார்.
”இது போன்ற செய்திகள் அனுப்பி தன் மீது இருக்கும் புகாரில் இருந்து ஊடகத்தையும் மக்களையும் திசைத்திருப்ப பார்க்கிறாரா சசிகலா புஷ்பா?” என்று இணையதலங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகிறது.