1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 15 ஆகஸ்ட் 2018 (14:47 IST)

நிவாரணப் பொருட்களை தோளில் சுமந்து சென்ற ஐஏஎஸ் அதிகாரிகள் - குவியும் பாராட்டுக்கள்

கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குக்கான நிவாரணப் பொருட்களை தூக்கிச் செல்ல ஆள் இல்லாததால், இரு ஐஏஸ் அதிகாரிகள் களத்தில் இறங்கி அவர்களே மூட்டையை தோளில் சுமந்து சென்றனர்.
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் காட்டி வருகிறது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத பெருமழையால் நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. 
 
ஆசியாவின் மிகபெரிய அணையாக திகழும் இடுக்கி அணை, வரலாறு காணாத அளவு நிரம்பியது. 26 ஆண்டுகளுக்கு பிறகு இடுக்கி அணையில் நீர் திறந்திவிடப்பட்டுள்ளது. இதனால் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
முக்கியமாக மலை பகுதிகளான இடுக்கி, வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர், ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய 11 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. 
 
கேரளாவில் ஏற்பட்டு இருக்கும் வெள்ளத்தால் மக்களின் இயல்பு நிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தங்களது வீடுகள், உடைமைகள் ஆகியவற்றை இழந்து முகாம்களில் தங்கி வருகின்றனர். 
 
கேரள மக்களுக்கு உதவும் வகையில், நாடெங்கும் இருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. 
 
இந்நிலையில் எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நள்ளிரவில் மக்களுக்காக கொண்டு செல்லப்பட்ட நிவாரணப்பொருட்களை ஜீப்பில் இருந்து இறக்கி வைக்க ஆள் இல்லாததால், ஐஏஎஸ் அதிகாரிகள் ராஜமாணிக்கம், உமேஷ் ஆகியோர் அரிசி, கோதுமை, பருப்பு மூட்டைகளை தங்களின் தோளில் சுமந்து சென்று இறக்கி வைத்தனர்.
 
அதிகாரிகளின் இந்த செயலை மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.