1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Bharathi
Last Modified: புதன், 21 அக்டோபர் 2015 (13:08 IST)

ஹரியானாவில் தலித் குழந்தைகள் எரித்துக் கொலை: 4 பேர் கைது, 7 போலீசார் சஸ்பெண்ட்

ஹரியானாவில் 2 தலித் குழந்தைகள் உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்ட வி்வகாரத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 7 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.


 
 
ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில் உள்ள சோன்பேட்டில் தான் இக்கோரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. சம்பவ தினத்தன்று தலித் வீடுகளின் மீது உயர் ஜாதி பிரிவைச் சேர்ந்தவர்கள் பெட்ரோல் ஊற்றி தீவைத்தனர்.
 
இதில் அந்த வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த  வைபவ் என்ற இரண்டரை வயது குழந்தையும், திவ்யா என்ற 11 மாத குழந்தையும் உயிரிழந்தது. குழந்தைகளின் தயார் ரேகா 70 சதவீதம் தீக்காயம் அடைந்த நிலையில் டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
 
இச்சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். 7 போலீசார் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.