வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 20 மே 2019 (13:02 IST)

காம்ரேடுகளை பின்னுக்கு தள்ளிய காங்கிரஸ்: கேரளா எக்சிட் போல் முடிவுகள்

மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் நேற்று முடிவடைந்த நிலையில் அனைத்து ஊடகங்களும் எந்த மாநிலத்தில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற கருத்துகணிப்பை வழங்கி வருகின்றன. 
 
இந்நிலையில் கேராளாவில் ஆளும் இடதுசாரி கட்சியை விட காங்கிரஸ் அதிக இடங்களை கைப்பற்றி பெரும்பான்மையை நிரூபிக்கும் என்று கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. 
 
அதன்படி இந்தியா டுடே வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் காங்கிரஸுக்கு 16 இடங்களும், இடதுசாரிகளுக்கு 5 இடங்களும் கிடைக்கும் என்றும், மலையாள மனோரமா நடத்திய கருத்து கணிப்பில் காங்கிரஸுக்கு 13 இடங்களும், இடதுசாரிகளுக்கு 2 இடங்களும், மீத 5 இடங்கள் இழுபறியாக இருப்பதாகவும் தெரிவிக்கின்றன.  
 
பாஜகவுக்கு ஒன்று அல்லது இரண்டு இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்றும் கருத்துகணிப்புகள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் தென்னிந்தியாவில் காங்கிரஸ் கூட்டணிக்கான வெற்றிவாய்ப்பு கேரளா மற்றும் தமிழகத்தில் அதிகம் உள்ளது தெரியவருகிறது. 
 
கேராளாவில் கம்யூனிஸ்ட் கட்சியும், காங்கிரஸும் மிகவும் செல்வாக்கு பெற்ற கட்சிகள். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு பகுதியில் வேட்பாளாராய் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.