திங்கள், 7 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: சனி, 26 ஏப்ரல் 2014 (18:00 IST)

பிரியங்கா காந்தியுடன் கைகுலுக்கிய ஆம் ஆத்மி தொண்டர்கள்

அமேதி தொகுதியில் ராகுல் காந்திக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்துவரும் பிரியங்கா காந்தியை பார்த்த ஆம் ஆத்மி தொண்டர்கள் அவருடன் கை குலுக்கி வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்திக்கு ஆதரவாக அமேதி தொகுதியில் பிரச்சாரம் செய்து வரும் அவரது சகோதரி பிரியங்கா காந்தி இன்று பிரச்சாரம் சென்ற பாதையில் ஆம் ஆத்மி தொண்டர்கள் வந்தனர். 
 
பிரியங்காவைப் பார்த்த ஆம் ஆத்மி தொண்டர்கள் அவருடன் கைகுலுக்கி வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். தலையில் காந்தி தொப்பி அணிந்து வந்த ஆம் ஆத்மி தொண்டர்களை, காங்கிரசில் இணையும்படி பிரியங்கா சிரித்துக்கொண்டே கூறினார்.
 
அமேதியில் மீண்டும் போட்டியிடும் ராகுல் காந்தியை எதிர்த்து ஆம் ஆத்மி சார்பில் குமார் விஸ்வாஸ் களமிறங்கியுள்ளார். ராகுல் காந்தியை வெளியேற்றுவதுடன் பரம்பரை அரசியலை முடிவுக்கு கொண்டு வருவதாக விஸ்வாஸ் வாக்குறுதி அளித்துள்ளார்.
 
இந்த சூழ்நிலையில் ஆம் ஆத்மி தொண்டர்கள், பிரியங்காவை சந்தித்தது ஆம் ஆத்மி கட்சியின் மேலிடத்திற்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் கடந்த ஜனவரி மாதம் ராகுல் காந்தியும் ஆம் ஆத்மி தொண்டர்களை யதார்த்தமாக சந்திக்க நேர்ந்தது. அப்போது, அவர்களிடம் காங்கிரசில் இணையும்படி ராகுல் காந்தி நகைச்சுவையாக கூறியது குறிப்பிடத்தக்கது.