வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Modified: செவ்வாய், 16 ஏப்ரல் 2019 (09:57 IST)

ராகுல் டிராவிட்டுக்கு ஓட்டு இல்லை – வீடுமாற்றத்தால் வந்த குழப்பம்

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட்டின் பெயர் வாக்காளர் பட்டியலில் இணைக்கப்படாததால் அவரால் ஓட்டுப் போட முடியாத சூழல் உருவாகியுள்ளது.

கர்நாடகா  மாநிலத்தில் உள்ள 14 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 18ஆம் தேதியன்று தேர்தல் நடைபெறவுள்ளது. ராகுல் டிராவிட் வசிக்கும் மத்திய பெங்களூர் தொகுதியில் அவரது பெயர் நீக்கப்பட்டுள்ளது. இதனால் அவரால் வாக்களிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.

ராகுல் டிராவிட் தான் வசித்த இந்திரா நகர் பகுதியில் இருந்து அஷ்வத் நகருக்கு குடிபெயர்ந்துள்ளார். இதனால் இந்திரா நகர் பகுதியில் இருந்து தங்கள் பெயரை நீக்குமாறு தனது சகோதரர் மூலம் விண்ணப்பித்திருக்கிறார். அதன் படி டிராவிட்டின் பெயர் இந்திரா நகர் பகுதி வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதன் பிறகு அவர் அஷ்வத் நகர் பகுதியில் தனது பெயரை இணைப்பதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை. வாக்காளர் பட்டியல் இறுதி செய்யப்பட்ட பிறகே ராகுல் டிராவிட்டின் பெயர் விடுபட்டு இருப்பதை தேர்தல் அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர். இதனால் இந்த தேர்தலில் ராகுல் டிராவிட் வாக்கு செலுத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது. கர்நாடக மாநிலத்தின் தேர்தல் ஆணைய தூதுவராக ராகுல் டிராவிட் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.