செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. வேட்பாளர்கள் பேட்டிகள்
Written By
Last Modified: சனி, 23 மார்ச் 2019 (21:29 IST)

மேற்கு வங்கத்தில் தனி நபர் ஆட்சி நடைபெறுகிறது - ராகுல் காந்தி

வரும் பாராளுமன்ற தேர்க்தலுக்கு அனைத்து கட்சிகளும் பிரச்சராம் செய்து வருகின்றன. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் மேற்குவங்கத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்நிலையில் ராகுல் காந்தி மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தாவின் மீது குற்றச்சாட்டி இருக்கிறார்.
மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸின் மம்தா பாணர்ஜி தலைமையிலான ஆட்சி நடக்கிறது. 
 
இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள மால்டா மாவட்டத்தில் சான்சாலில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ராகு, காந்தி கூறியதாவது:
 
மம்தா பாணர்ஜி மக்கள் நலப் பிரச்சனைக்காக யாருடனும் பேசுவது கிடையாது. முக்கியமாக யாருடைய பரிந்துரையோ கோரிக்கைகளையோ பேசுவது கிடையாது.
 
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் தனிநபர் ஆட்சிதான் நடக்கிறது. இவ்வாறு பேசினார்.