ஞாயிறு, 6 அக்டோபர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 5 மார்ச் 2024 (11:45 IST)

ரஞ்சி கோப்பை தோல்விக்கு முழுக் காரணமும் கேப்டன் சாய் கிஷோர்தான் – தமிழக அணி பயிற்சியாளர் கோபம்!

கடந்த சில மாதங்களாக ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்ற நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தமிழ்நாடு அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றதை அடுத்து இந்த தொடரின் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அரையிறுதியில் தமிழக அணி மும்பை அணியிடம் பரிதாபமாக தோற்றது. இதற்கு டாஸ் வென்று முதலில் பந்துவீசாமல் பேட் செய்வதாக அறிவித்த கேப்டன் சாய் கிஷோரின் முடிவுதான் காரணம் என விமர்சனம் எழுந்தது.

இப்போது அதே கருத்டஹி தமிழக அணியின் பயிற்சியாளர் சுலக்‌ஷன் குல்கர்னியும் தெரிவித்துள்ளார். அவர் “ஒரு மும்பைக் காரனாக இந்த மைதானத்தைப் பற்றி நான் நன்கு அறிந்திருந்தேன். அதனால் முதலிலேயே நாங்கள் டாஸ் வென்றால் பந்துவீச வேண்டும் என முடிவுசெய்திருந்தோம். ஆனால் எங்கள் கேப்டன் வேறொரு முடிவை எடுத்துவிட்டார். இந்த போட்டி ஆரம்பித்த ஒரு மணிநேரத்திலேயே தோற்று விட்டோம். அதிலிருந்து மீளுவது கடினமான ஒன்று” எனக் கூறியுள்ளார்.