1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 3 செப்டம்பர் 2020 (13:38 IST)

விமானத்தின் எமெர்ஜென்ஸி எக்ஸிட்டைத் திறந்து வெளியே வந்த பெண்! அதிர்ச்சியில் அதிகாரிகள்!

விமானத்தின் உள்ளே புழுக்கமாக இருந்ததால் அவசர நேர கதவைத் திறந்து பெண் ஒருவர் வெளியே வந்து விமானத்தின் இறக்கையில் அமர்ந்திருந்தார்.

துருக்கியிலிருந்து போரிஸ்பில் சர்வதேச விமான நிலையத்திற்கு விமானம் ஒன்று வந்துள்ளது. அப்போது விமானத்தில் இருந்து பயணிகள் எல்லாம் இறங்க ஒரு பெண் மட்டும் எமெர்ஜென்ஸீ கதவைத் திறந்து விமானத்தின் இறக்கை மீது அமர்ந்துள்ளார். அதைப் பார்த்து அதிர்ச்சியான அதிகாரிகள் அவரைப் பத்திரமாக வெளியேற்றி விசாரித்த போது உள்ளே புழுக்கமாக இருந்ததால் வெளியே வந்து உட்கார்ந்திருந்தேன் எனக் கூறினாராம்.