வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 3 அக்டோபர் 2017 (22:01 IST)

மீண்டும் கைது, மீண்டும் ஜாமீன்: லண்டன் போலீசுக்கே கல்தா கொடுக்கும் விஜய் மல்லையா

பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வரும் நிலையில் அவர் வாங்கிய ரூ.9000 கோடி கடனை எப்படி வசூல் செய்வது என்று தெரியாமல் மத்திய அரசு விழிபிதுங்கி வருகிறது.



 
 
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் லண்டனில் விஜய் மல்லையா கைது செய்யப்பட்டதால் ஒரு வழியாக அவரை இந்தியாவுக்கு அழைத்து வரலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்ட நிலையில் ஒருசில மணி நேரத்தில் ஜாமீன் பெற்று இந்திய அரசுக்கே ஆட்டம் காட்டினார்
 
இந்த நிலையில் இன்று மேலும் ஒரு வழக்கிற்காக விஜய்மல்லையா லண்டன் போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஆனால் இந்த முறையும் என்ன மாயம் நடந்ததோ தெரியவில்லை, உடனே அவருக்கு ஜாமீன் கிடைத்துவிட்டது. லண்டன் போலீசுக்கே கல்தா கொடுத்து வரும் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வருவது என்பது சாத்தியமா? என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது.