1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 20 டிசம்பர் 2022 (23:14 IST)

அறையை தூய்மை செய்யச் சொன்ன தாயைக் கொன்ற மகன்!

அமெரிக்க நாட்டின் புளொரிடா மாகாணத்தில் வசித்து வருபவர் ஜேக்கப்(17). இவர் தன் வீட்டின் இருந்தபோது, அவரது தாய் அவரிடம் வந்து அறையைச் சுத்தம் செய்யும்படி கூறியுள்ளார்.

அப்போது, அம்மாவுக்கும் ஜேக்கப்பும் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது., இதில், ஆத்திரம் அடைந்த ஜேக்கப்  அருகில் இருந்த கத்தியை எடுத்து தாயை கத்தியால் குத்தியுள்ளார்.

இதில், படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்து கிழே விழுந்தார். அவரை மருத்துவமனையில் சேர்த்தபின், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஜேக்கப்பை கைது செய்துள்ளனர்.  இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.