வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 10 ஜூலை 2019 (21:26 IST)

அமெரிக்காவில் யூதர் என நினைத்து இளைஞரை அடித்து உதைத்த நபர் ...

வெளிநாட்டில் முந்தைய அளவுக்கு இல்லை என்றாலும் கூட அவ்வப்போது அந்த இனவெறி பிரச்சனை தலைதூக்கிக்கொண்டேதான் உள்ளது. 
கடந்த 2017ம் ஆண்டில் சின்சிணாட்டி உனவகத்துக்குச் சென்ற இஜ்மிர் கோச் , உணவு சாப்பிட்டு விட்டு, வெளியே வரும் போது, வெளியி நின்றிருந்த ஒருவரை பார்த்து, அவரை யூதர் என்று நினைத்து பலமாகத் தாக்கியுள்ளார். மேலும் அனைத்து யூதர்களையும் கொல்லப் போகிறேன் என்று தெரிவித்துள்ளார். ஆனால் கோச் கொலை வெறியோடு தாக்கிய நபர் உண்மையில் யூதர் இல்லை.

இந்தக் தாக்குதல் கோச், அடித்த நபருக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்துள்ளார்.
 
பின்னர், இதுகுறித்து, கோச் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கோர்ட்டில்  வழக்கு நடைபெற்று வந்த நிலையில் அமெரிக்க நாட்டின் வெறுப்புணர்வு குற்றங்களுக்காக சட்ட விதிகளை மீறி செயல்பட்டதற்காக கோச்சுக்கு 30 மாதங்கள் சிறைதண்டனை அளித்து தீர்ப்பளித்தார் நீதிபதி.
 
இதுபற்றிய வழக்கு வழக்குப் பதிவு  நடந்தது.  இதில், அமெரிக்க வெறுப்புணர்வு குற்றங்களுக்கான சட்ட விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கோச்சுக்கு 30 மாதங்கள் வரை சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.