1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 28 ஜனவரி 2022 (08:38 IST)

பாகிஸ்தான் ராணுவம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்: 10 பேர் பலி!

பாகிஸ்தான் ராணுவம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்: 10 பேர் பலி!
பாகிஸ்தான் ராணுவம் மீது பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதாகவும் இதில் 10 ராணுவ வீரர்கள் பரிதாபமாக பலியானதாகவும் வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் என்ற மாகாணத்தின் சோதனைச்சாவடியில் பாதுகாப்புக்கு ராணுவ வீரர்கள் நின்று கொண்டிருந்த போது திடீரென அங்கு வந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் இதில் பாகிஸ்தான் வீரர்கள் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
பாகிஸ்தான் வீரர்களின் பதில் தாக்குதலில் ஒரு பயங்கரவாதி மட்டும் கொல்லப்பட்டதாகவும் ஒரு சிலர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன 
 
மேலும் மூன்று பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ராணுவம் கைது செய்து விசாரணை செய்து வருவதாகவும் பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது