1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 1 டிசம்பர் 2016 (11:03 IST)

பாலைவனத்தில் பனிபொழிவு: ஆச்சரியத்தில் மக்கள்!!

சவுதி அரேபியா என்றாலே பாலைவனம் தான் முதலில் நினைவிற்கு வரும். பாலைவன நாடான சவுதி அரேபியாவில் நடுங்கவைக்கும் அளவிற்கு கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. 


 
 
எப்போதும் கடுமையான வெப்பம் நிலவி வரும் பாலைவன நாடான சவுதியில் நீர்நிலைகள் வறண்டு, எப்போதும் சூடாக இருக்கும். ஆனால் சற்றும் எதிர்பாராத வகையில் சவுதி அரேபியாவின் வடக்கு பகுதியில் தற்போது கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
 
இதனை அங்குள்ள பொதுமக்கள் ஆச்சரியத்துடன் வரவேற்றுள்ளனர். மழைப்பொழிவை எதிர்பார்த்து காத்திருந்த சூழலில், எதிர்பாராத பனிப்பொழிவு சற்று வித்தியாசமான உணர்வை ஏற்படுத்தியுள்ளது. 
 
சாலைகளில் படந்துள்ள பனியால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் பனியில் சிற்பம் வடித்து மக்கள் கொண்டாடி வருகின்றனர்.